தருமபுரி, மே 2- மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறை விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்க திர் தமிழ் நாளிதழின் முதன்மை பொது மேலாளருமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஞாயிறன்று இரவு மாரடைப்பால் காலமானார். இவரது மறைவையொட்டி தருமபுரி செங் கொடிபுரத்தில் அவரது உருவ படத் துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி, காரிமங்கலம் பி.ஜெய ராமன், பாப்பிரெட்பட்டி தனுசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச் சந்திரன், வழக்கறிஞர் டி.மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கோவை
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ் சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, எம்என்எஸ் அவர்களின் உருவப்படத் திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவி யும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தாராபுரம்
தாராபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தீக்க திர் நாளிதழின் முதன்மை பொது மேலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பின ருமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட் டராமன் மறைவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர்
மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்குப்பகுதி அலுவலகமான தோழர் பி.ஆர். நிலையத்தில் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் தெற்கு மாநகர் குழு செய லாளர் டி.ஜெயபால், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். சுந்தரம், ஆர்.மைதிலி, எஸ்.பவித்ரா தேவி, ஷகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீக்கதிர் கோவைப்பதிப்பு
தீக்கதிர் கோவைப்பதிப்பு அலுவ லக வளாகத்தில் தோழர் எம்என்எஸ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஏ.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் ஆசிரியர் கிளைச் செயலாளர் மனோஜ் பிரசாத் மற்றும் ஆசிரியர், நிர்வாகக்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.