india

சர்மிளாவை கண்டு நடுங்கும் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

மறைந்த முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போது ஆந்திர முதல்வ ராக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி யின் தலைவர் ஜெகன் மோகனின் தங்கை யுமான ஒய்.எஸ்.சர்மிளா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள் ளார்.

சர்மிளா வருகையால் ஆந்திர அர சியலில் பரபரப்பு நிலவி வருகிறது. தந்தையின் இடத்தை பிடிக்கும் முனைப்பிலும்,  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பிரிக்க வும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவின் ஊழல் வழக்கை கையிலெடுத்து போராட்டம் நடத்திட சர்மிளா முயன்று வருகிறார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர  மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் ஆதரவுடன் களமிறங்கி, மத்தியில் “இந்தியா” கூட்டணி வெற்றிபெறவும், ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் ஆட்சியை அகற்றவும் சர்மிளா தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்துள்ள முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திர பாபு 2 நாட்களுக்கு முன் தில்லிக்கு ஓட்டம் பிடித்து உள்துறை அமைச்சர் அமித்  ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து வெள்ளி யன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலை வரும், முதல்வருமான ஜெகன் மோகன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். 

கூட்டணிக்கு மோதலா?
ஆந்திராவில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் - நடிகர் பவன் கல்யா ணின் ஜனசேனா கட்சி ஏற்கெனவே கூட்ட ணியாக உள்ளனர். சந்திரபாபு அமித் ஷா வை சந்தித்த பின் தெலுங்கு தேசம் -  ஜனசேனா கட்சிகள் எந்த நேரத்திலும் பாஜக கூட்டணியில் இணையலாம் என தகவல் வெளியாகியது. இதற்கிடையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன் மோகன் மோடியை சந்திக்க தில்லிக்கு ஓட்டம் பிடித்துள்ளார். இதன்மூலம் பாஜக உடனான கூட்டணிக்காக தெலுங்கு தேசம், ஜனசேனா, ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டி போட்டு வருகிறதா என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.