india

img

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இணையதளம் முடக்கம்

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) அமைப்பை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து, உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இந்த தடை உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. அதே போல், பி.எஃப்.ஐ அமைப்பின் 8 இணை அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பி.எஃப்.ஐ அமைப்பின் இணையதளம் மற்றும் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. 
 

;