india

img

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!

நீர்மின் திட்டம் தொடர்பான வழக்கில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது.
சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பேட்டியளித்திருந்தார். இதை அடுத்து கிரு நீர்மின் திட்டத்தில் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக சத்யபால் மாலிக் மீது வழக்குத் தொடர்ந்த சிபிஐ அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. ஜம்மு - காஷ்மீரில் அரசு ஊழியர்களுக்கு குழு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தங்களை வழங்கியதிலும் சத்யபால் மாலிக் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது.