india

img

மக்கள் தொகை பெருக்கத்தை  கட்டுப்படுத்தக்கோரி வழக்கு...  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி:
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மக்கள் தொகை பெருக்கம் மிகவும் அபாயகரமானது. நாட்டின்  வளர்ச்சியை மக்கள்  தொகை பெருக்கம் பாதிக்கும் .ஆரோக்கியமான, அறிவார்ந்த, வளர்ச்சியடைந்த வலிமையான இந்தியாவை உருவாக்க மக்கள்  தொகை பெருக்கம் தடையாகஉள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

;