india

img

வாரணாசி ஐஐடி மாணவி பாலியல் வழக்கு

பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் பிர தமர் மோடியின் சொந்த  தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ளது இந்து பனாரஸ் பல்கலைக்கழக ஐஐடி. இந்த ஐஐடி  வளாகத்தில் மாணவி ஒருவரை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி பாஜக வைச் சேர்ந்த குணால் பாண்டே, ஆனந்த் என்ற அபிஷேக் சவுகான் மற்றும் சக்ஷாம் படேல் ஆகியோர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். இவர்களின் விபரம் காவல்துறைக்கு தெரிந்தும், 2 மாத  காலம் கைது செய்யாமல் உத்தரப்  பிரதேச காவல்துறை காலம் தாழ்த்திய நிலையில், 3 பேரையும் ஞாயிறன்று கைது செய்தது. மோடி, ஆதித்யநாத், 

மோடி, ஆதித்யநாத், ஸ்மிருதி இரானி, நட்டாவுக்கு நெருக்கமானவர்கள்

கைது செய்யப்பட்ட 3 பேரில் குணால் பாண்டே வாரணாசி தொகு தியின் பாஜக தொழில்நுட்ப உறுப்பின ராக இருந்தார். அதாவது மோடியின்  பிரச்சாரம், அவருக்கு உதவி தொடர்பான வேலையை கவனித்து  வந்துள்ளார். அதே போல சாக்‌ஷம்  படேல் உத்தரப்பிரதேச பாஜக தலை வர் திலீப் படேலின் உதவியாளர் ஆவார். குணால் பாண்டே, சாக்‌ ஷம் படேல் இருவரும் பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய பாஜக தலைவர் நட்டாவுக்கு நெருக்கமானவர்கள் என்ற ஆதாரத்தை புகைப்படத்து டன் உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தனது டுவிட்டர்  எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். 

இந்நிலையில், பலாத்கார குற்ற வாளிகளின் விபரங்களை வெளி யிடுவது சட்டவிரோதம் எனக் கூறி  காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மீது  அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பாலியல் பலாத்  கார குற்றவாளியை கைது செய்ய  உத்தரப்பிரதேச காவல்துறை 2  மாதம் எடுத்துக்கொண்ட நிலையில்,  காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மீது மட்டும் 12 மணிநேரத்தில்  வழக்  குப்பதிவு செய்துள்ளது. இந்த விவ காரத்திற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.

2 மாதம் ம.பி. தேர்தலில் பிரச்சார வேலை...

வாரணாசி ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்பு டைய 3 பேரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை  தேடி வருவதாகவும் உத்தரப்பிரதேச காவல்துறை கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் தெரிவித்தது.  ஆனால் குணால் பாண்டே, சாக்‌ஷம் படேல் ஆகிய இருவரும் சமீபத்தில் நிறைவு பெற்ற மத்தியப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் தொழில்நுட்ப பிரச்சார வேலைகளை கவ னித்துள்ளனர். அதன்பிறகு ஒரு மாத ஓய்வுக்கு பின்னர் இந்த  கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள் ளது. பாலியல் குற்றவாளிகளை சிறையில் தள்ளாமல் அரசியல் ஆதா யத்திற்காக பிரச்சார வேலைகளில் ஈடுபடுத்தி கீழ்த்தரமான அரசி யலை மேற்கொண்டு வருகிறது பாஜக.