கொல்கத்தா, மே 6- மேற்கு வங்கத்தின் வரலாற்று பூமியான முர்ஷிதாபாத், நாடு எதிர்நோக்கும் போராட்டத்திற்கு சாட்சியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் இப்பகுதி கிரேட்டர் வங்காளத்தின் நிர்வாக மையமாக இருந்தது. காஷ்மீருக்கு அடுத்தபடி யாக, நாட்டில் அதிக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி இது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மூன்று மக்களவைத் தொகுதிகள் உள்ளன. பெஹ்ராம்பூர், ஜாங்கிபூர் மற்றும் முர்ஷிதாபாத். இடது முன்னணி - காங்கிரஸ் உடன்படிக்கையின்படி, சிபிஎம் முர்ஷிதாபாத்தில் போட்டியிடு கிறது.
இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முஹம்மது சலீம் வேட்பாளராக நிறுத்த ப்பட்டுள்ளார். காங்கிரஸ் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது. கம்யூ னிஸ்ட் கோட்டையான முர்ஷிதாபா த்தை மீண்டும் கைப்பற்ற சலீம் கடுமையாக போராடிக் கொண்டிருக் கிறார். அதே வேளையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அருகிலுள்ள பெஹ்ராம்பூரில் ஆறாவது வெற்றியை நோக்கிச்செல்கிறார்.
முர்ஷிதாபாத்தில் அதிக முறை இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். 2014இல் சிபிஎம் வெற்றி பெற்ற முர்ஷிதாபாத்தில் 2019இல் திரிணா முல் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள தொகுதியில் இந்த ஒருங்கிணைந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. முகமது சலீம் மூலம் இடது முன்னணி இடத்தை மீண்டும் கைப்பற்றும். தற்போதைய எம்பி அபுதாஹிர் கானை மீண்டும் களமிறக்கி உள்ள திரிணாமுல் கட்சி யால் சலீமின் மக்கள் ஆதரவை முறி யடிக்க முடியாது என்பது உறுதி.
பாஜகவின் கவுரி சங்கர் கோஷும் களத்தில் உள்ளார். குஜராத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திரிணாமுல் வேட்பாளராக உள்ளார். பாஜக வேட்பாளர் நிர்மல் குமார் ஷா. ஜாங்கிபூரில் திரிணாமுல் கட்சியின் கலீலு ரஹ்மான் இடதுசாரி ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் முர்போஜா ஹொசைனை எதிர்கொள் கிறார். பாஜகவின் தன்ராஜ் கோஷும் போட்டியிடுகிறார். முர்ஷிதாபாத் மற்றும் ஜாங்கிபூரில் 7ஆம் தேதியும், பெஹ்ராம்பூரில் 13ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.