4-ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது
புதுதில்லி, மே 11- 7 கட்டமாக நடைபெறும் 18ஆவது மக்களவை தேர் தலில் இதுவரை மூன்று கட் டம் நிறைவுபெற்றுள்ள நிலை யில், 4ஆவது கட்டத்தில் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறும் இந்த 96 தொகுதிகளிலும் சனிக்கிழ மையன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்தி ராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக் கும் ஒரே கட்டமாகவும், ஒடி சாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் மே 13 அன்றும் தேர்தல் நடை பெற உள்ளது.
3-ஆம் கட்டத்தில் 65.68 சதவிகித வாக்குகள் பதிவு
புதுதில்லி, மே 11- மே 7 அன்று 12 மாநிலங்க ளில் உள்ள 93 தொகுதி களுக்கு நடைபெற்ற மூன் றாம் கட்டத் தேர்தலில் 65.68 சதவிகித வாக்குகள் பதி வாகியுள்ளதாக இந்திய தேர் தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக உத்த ரப்பிரதேசத்தில் 10 தொகுதி களுக்கு நடந்த தேர்தலில் 57.55 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.