மணிப்பூர் பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் முதல் நாளிலேயே நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.
மணிப்பூரில், கடந்த மே 4-ஆம் தேதி குக்கி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முதல் நாளிலேயே நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.