கர்நாடகா மாநில சட்டசபையின் சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதை அடுத்து, கடந்த 29-ஆம் தேதி, சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா அரசு வெற்றி பெற்ற நிலையில், சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கர்நாடக சட்டசபையின் சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.