india

img

பிரதமருக்கு பாஜக எம்.பி. கேள்வி 10 லட்சம் வேலைவாய்ப்பு இருக்கட்டும்; 2 கோடி வேலை வாக்குறுதி என்ன ஆனது?

புதுதில்லி, ஜூன் 14- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்  பேரனான வருண் காந்தி, பாஜக சார்பில் எம்.பி.  பதவியை வகித்து வந்தாலும், புதிய வேளாண் சட்  டங்கள் துவங்கி ஒன்றிய அரசின் நடவடிக்கை களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகை யிலேயே பிரதமர் மோடியின் 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதியைப் பற்றியும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி அனைத்து ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும்  அமைச்சகங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதில், அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த வேண்டும்  என பிரதமர் மோடி அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தினார்” என்று  பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திக் குறிப்பு ஒன்றை  வெளியிட்டிருந்தது. இந்த செய்திக் குறிப்பை முன்வைத்தே வருண் காந்தி  பதிலடி கொடுத்துள்ளார். “பிரதமருக்கு நன்றி. வேலையில்லா இளைஞர்களின் வலியையும்,  உணர்வுகளையும் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு நாம் 1 கோடி காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்  டும். அப்போதுதான் நாம் வாக்குறுதி கொடுத்தபடி ஆண்டுக்கு 2 கோடி  வேலைகளை உருவாக்க முடியும். அந்த இலக்கை அடைய கூடுதல் வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று கிண்டல் அடித்துள்ளார். முன்னதாக, “மத்தியிலும், மாநிலங்களிலும் 60 லட்சத்துக்கும் மேற்  பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஆனால் நாட்டில்  வேலைவாய்ப்பின்மை வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக உள்ளது. நாட்டில் இன்றைய பெரும் பிரச்சனையே வேலையின்மைதான். நாட்டின்  ஒட்டுமொத்த தலைவர்களும் அரசாங்கத்தின் கவனத்தை இந்தப் பிரச்ச னையின் மீது திருப்ப முற்பட வேண்டும். வேலையில்லா இளைஞர் களுக்கு நீதி வேண்டும். அப்போதுதான் இந்த நாடு வலிமையான நாடாகும்” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். அந்த டுவீட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட வருண் காந்தி, “நான் எழுப்ப நினைத்த கேள்விகளை ஓவைசி முன்வைத்துள்ளார். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.