மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தொடர்பான வேலையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. “இந் தியா” கூட்டணி கட்சிகள் 60% அளவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர் தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலை யில், பாஜக இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு கட்ட வேட்பாளர்களில் 30க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் பாஜக சீட் வழங்கவில்லை. இதற்கு பல்வேறு கார ணங்கள் கூறப்பட்ட நிலையில், பணம் தொடர்பான பிரச்சனை காரணமாகவே சிட்டிங் எம்பிக்களுக்கு சீட் தரப்பட வில்லையா? என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது. ஏற்கெனவே கோடிக்க ணக்கில் பணம் கொடுத்தால் சீட் தரு வோம் என சொந்த கட்சியினரையே பாஜக மிரட்டுகிறது என காங்கிரஸ், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி இருந்த நிலை யில், தற்போது பாஜக மூத்த தலைவரே சொந்த கட்சியின் கல்லா கட்டும் வேலை யை போட்டுடைத்து கட்சியை விட்டு ஓட்டம் பிடித்துவிட்டார்.
பாஜக மிகப்பெரிய ஊழல் செய்கிறது
மத்தியப்பிரதேச பாஜக மூத்த தலை வரும், மாநிலங்களவை எம்பியுமான அஜய் பிரதா சிங் அம்மாநில அரசியலில் முக்கிய தலைவராக உள்ளார். இவ ருக்கு கட்சியில் மட்டுமின்றி, மாநிலத்தில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள நிலை யில், மக்களவை வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வரு வதாகவும், பாஜகவை விட்டு வெளியேறி யுள்ள அஜய் பிரதாப் சிங் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜய் பிரதாப் சிங் கட்சியை விட்டு வில கியது பாஜகவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டி தேர்தல் பத்திர திட்டத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்திய பிரத மர் மோடியின் தலைமையிலான பாஜக அரசின் பிரம்மாண்ட ஊழல் உச்சநீதிமன் றம் அம்பலப்படுத்தியுள்ள சூழலில், வேட்பாளர் தேர்விலும் பாஜக கல்லா கட்டும் நிகழ்வு கடும் கண்டனத்துக்கு உள் ளாகி வருகிறது.
புதுச்சேரியிலும் ரூ.50 கோடிக்கு மக்களவை சீட் விற்பனை
பாஜக கூட்டணி ஆளும் புதுச்சேரியில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது. கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸை மிரட்டி புதுச்சேரி மக்களவை தொகு தியில் பாஜக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மக்களவை வேட்பாளராக காரைக்காலைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஜி.என்.எஸ்.ராஜசேகரனை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட வரும், பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவுமான சிவசங்கரன்,”பணம் கொடுத்தால் மட்டுமே பாஜக சீட் வழங்குகிறது” என கூறி அடுத்தகட்ட சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”பாஜக ஒருபோதும் மக்கள் செல்வாக்கை பார்ப்பதில்லை. பணம் தந்தால் மட்டுமே வாய்ப்பு என்ற நிலைமை யை செயல்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட ரூ.50 கோடி கொடுத்தால் சீட் என்கிறார்கள். பாஜக தலைமை சரியில்லை” என கூறியுள்ளார்.