புதுதில்லி
முதல் கட்டத் தேர்தலில் “இந்தியா” கூட்டணி 70க்கும் மேல் வெல்லும்
7 கட்டமாக நடைபெறும் 18-ஆவது மக் களவை தேர்தலின் முதல்கட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. தமிழ் நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடை பெற்றது. இந்த 102 தொகுதிகளில் “இந் தியா” கூட்டணி 70க்கும் மேற்பட்ட தொகு திகளில் வெல்லும் என்றும், பீகார், ராஜஸ் தான், உத்தரப்பிரதேச மாநிலங்களில் பாஜக பலத்த அடியை சந்திக்கும் என்று காங்கிரஸ் கட்சி தன்னுடைய கருத்துக் கணிப்பு நிபுணத்துவத்தின் அடிப்படை யில் தகவல் தெரிவித்துள்ளது.
இதுபோக பாஜகவின் 400 தொகுதி கள் இலக்கு முதல்கட்ட வாக்குப்பதிவி லேயே தரைமட்டமாகியுள்ளது என்றும், பீகார் மாநிலத்தில் பாஜக பலத்த சேதா ரத்தை சந்திக்கும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் கருத்து தெரிவித்து ளது.
இதே போல சமூகவலைதள கருத் துக்கணிப்பு நிறுவனங்களும் முதல்கட்ட வாக்குபதிவில் “இந்தியா” கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தகவல் தெரிவித்துள்ளது பாஜகவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
புதுதில்லி
குற்றவாளியிடம் ரூ.60 கோடி வாங்கிய பாஜக
அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறி ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்கும் நோக் கத்திலும், மக்களவை தேர்தலில் பங் கேற்க முடியாதபடியும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மாநி லங்களவை எம்பி சஞ்சய் சிங் மற்றும் பிஆர்எஸ் கட்சித் தலைவர் கவிதா என 15க்கும் மேற்பட்டோரை அமலாக்கத் துறை மூலம் சிறையில் அடைத்துள்ளது மோடி அரசு. அமலாக்கத்துறை பிடியில் 6 மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்த ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் சமீபத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரிடமி ருந்து பாஜக 60 கோடி ரூபாய் வாங்கிய தாக சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மதுபான ஊழல் வழக்கில் எந்த ஆதா ரமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மதுபான ஊழலின் மன்னன் என்று அமலாக்கத்துறை தனது குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள சரத் ரெட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக விற்கு ரூ.60 கோடி கொடுத்தார். இந்த விவ காரத்தில் பாஜகவிற்கு எதிராக அம லாக்கத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பி னார்.
இதே போல சரத் ரெட்டிக்கு மிக நெருக்கமான தெலுங்கு தேச கட்சியின் மகுந்தா ரெட்டி கைது செய்யப்படாமல் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறார். ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வதால் மகுந்தா ரெட்டி கைது செய்யப்படாமல் இருக்கிறார் என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.