india

img

உள்ளிருந்தே அரித்து, அழிக்கத் துடிக்கும் பாஜக முயற்சி பலிக்காது அரசியலமைப்பை மக்கள் பாதுகாப்பார்கள்!

புதுதில்லி, டிச.14- இந்தியாவில் மனு ஸ்மிருதி  அடிப்படையிலான அரசியல மைப்பை கொண்டுவந்து விட வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் - பாஜகவின் திட்டம் பலிக்காது என்  றும், டாக்டர் அம்பேத்கர் ஆக்கி யளித்த அரசியலமைப்பை 140  கோடி இந்திய மக்கள் பாதுகாப்பார்  கள் என்றும் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கூறினார்.

இந்தியக் குடியரசின் 75-ஆவது  ஆண்டு நிறைவு விழாவைக் கொண்  டாடும் விதமாக நாடாளுமன்றத் தில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், நமது அரசியலமைப்பின் வர லாற்று முக்கியத்துவத்தையும், அது எதிர்கொள்ளும் சவால்களை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் விரிவாக எடுத்துரைத்தார். அதில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:

அரசியலமைப்பின் அடித்தளம்

இந்தியக் குடியரசின் 75-ஆவது  ஆண்டு விழாவைக் கொண்டாடும்  இந்த வேளையில், 1950 ஜனவரி 26 அன்று அமலுக்கு வந்த அரசி யலமைப்புச் சட்டம் தான் இந்தியா வை ஒரு குடியரசாக மாற்றியது என்  பதை நினைவுகூர வேண்டியது அவசியம். இந்த அரசியலமைப்பு தற்போது தனது வரலாற்றில் மிகப்  பெரிய அச்சுறுத்தலை எதிர் கொண் டுள்ளது என்பது உண்மை.

அரசியலமைப்பின் தனித்துவம்

அரசியலமைப்பின் காரணமா கவே இந்தியா மதச்சார்பற்ற நாடா ளுமன்ற ஜனநாயகமாக மாறியது. இனம், மதம், நம்பிக்கை அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்  படுத்தாமல் அனைத்து குடிமக்க ளுக்கும் சம உரிமைகளை வழங்கி யதும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தியதும் இந்த அரசியலமைப்பே. சிறுபான் மையினர் மற்றும் தலித்துக்கள், பழங்குடியினர் போன்ற சமூக ரீதி யாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரி மைகளையும் இதுவே அங்கீகரித்தது.

தற்போதைய அச்சுறுத்தல்கள்

அரசியலமைப்பின் அடிப்ப டைக் கோட்பாடுகளுக்கான அச்சு றுத்தல், அரசியலமைப்பைக் காப்  பாற்றி அதன் நிறுவனங்களை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்  கப்பட்டுள்ள மக்களிடமிருந்தே வருகிறது. ஆளும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி, அரசிய லமைப்பின் அடிப்படை மதிப்பு களுக்கு எதிரான இந்துத்துவ சித் தாந்தத்தைக் கடைப்பிடிக்கிறது. ஆர்எஸ்எஸ்ஸும் அதன் சித்தாந் தவாதிகளும் அரசியலமைப்பு மீதான தங்கள் வெறுப்பை ஒருபோதும் மறைத்ததில்லை.

ஆர்எஸ்எஸ்சின் நிலைப்பாடு

இந்திய அரசியலமைப்பு என்  பது, “மேற்கத்திய நாடுகளின்  பல்வேறு அரசியலமைப்புகளிலி ருந்து பல்வேறு சட்டப்பிரிவுகளை ஒன்றிணைத்த ஒரு பலதரப்பட்ட தொகுப்பு” என்பது தான், ஆர்எஸ்எஸ்-சின் இரண்டாவது சர்சங் சாலக் எம்.எஸ். கோல்வால் கரின் கூற்று. ஆர்எஸ்எஸ் தலை வரும், ஜனசங்கத்தின் முன்னாள்  தலைவருமான தீன்தயாள் உபாத் யாயாவும் இதே கருத்தைத் தான் எதிரொலித்தார். இந்தியாவின் அரசியலமைப்பு பிற நாடுகளைப் பின்பற்றியது என்றும், இந்தியா வின் வாழ்க்கை முறை மற்றும்  இலட்சியங்களிலிருந்து விலகி  இருப்பதாகவும் அவர் கூறினார். ‘முதல் சட்டமியற்றுநர்’ மனுவின்  மனுஸ்மிருதி உட்பட இந்தியா வின் பண்டைய கலாச்சாரம் மற்றும்  பண்புகளுக்கு ஏற்ற அரசியலமைப்  பையே அவர்கள் விரும்பினர்.

அரசியலமைப்பின் மீதான தாக்குதல்கள்

மோடி அரசு பதவிக்கு வந்ததி லிருந்து, அமைச்சர்களும், பல்  வேறு அரசு நிறுவனங்களில் முக் கிய பதவிகளில் உள்ளவர்களும் அரசியலமைப்பை மாற்றுவது பற்றிப் பேசி வருகின்றனர். அரசி யலமைப்பின் பல்வேறு அம்சங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அரசியலமைப்பு அறிவியல் மனப்  பான்மையை வலியுறுத்துகிறது. இது இந்துத்துவ பக்தர்களுக்கு  வெறுப்பூட்டுவதாக உள்ளது. எனவே, அறிவியலுக்கு எதிரான கருத்துக்களையும், பகுத்தறிவுக்கு எதிரான சிந்தனைகளையும் பரப்பு வதே இந்த ஆட்சியின் வேலை யாக உள்ளது.

அம்பேத்கரின் எச்சரிக்கை

இந்த தருணத்தில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1949 நவம்பர் 25  அன்று அரசியலமைப்பு சபையில்  ஆற்றிய தனது கடைசி உரையில் எச்சரித்ததை நினைவுகூர்வது பொருத்தமானது: “ஒரு அரசியல மைப்பு எவ்வளவு சிறப்பாக இருந்  தாலும், அதை செயல்படுத்துவதற் கான இடத்தில் அமர்த்தப்படும் ஆட்சியாளர்கள் தீயவர்களாக இருந்தால், அந்த அரசியலமைப்பே மோசமாக மாறிவிடும் என்று நான் உணர்கிறேன்”, என்றார். தற்போது அரசியலமைப்பை செயல்படுத்த அழைக்கப்பட்டவர்கள் உண்மை யிலேயே தீயவர்கள் தான்.

அரசியலமைப்பை  மாற்றும் முயற்சிகள்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-சின் இறுதி நோக்கம் அரசியல மைப்பையே மாற்றுவது தான் என்  பதை நினைக்கும் போது உண்மை யிலேயே கவலையாக உள்ளது.  அதற்கேற்ப தான் தற்போது  எல்லாம் நடந்து கொண்டிருக்கி றது. அரசியலமைப்பை செயல் படுத்துபவர்களாலேயே அது உள்ளிருந்து சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல மைப்பின் கீழ் உள்ள ஒவ்வொரு  நிறுவனமும் - நீதித்துறை, குடி மைப் பணிகள் அல்லது ஆயுதப் படைகள் என அனைத்தும் - உள்  ளிருந்தே அரிக்கப்பட்டு, அவற்  றின் நேர்மை சமரசம் செய்யப்படு கிறது. ஆளுநர்கள் போன்ற அரசி யலமைப்பு பதவிகளை வகிப்பவர் கள் அரசியலமைப்புக்கு எதிரான  கருத்துக்களை பரப்பி வருகின்ற னர்.

மக்களின் பொறுப்பு

அரசியலமைப்பை பலவீனப் படுத்தி அரிப்பதற்கான இந்த முயற்சிகள் குடிமக்களின் அடிப்  படை உரிமைகள் மீதான தாக்குத லாகும். இவை மதச்சார்பற்ற - ஜன நாயக குடியரசுக்கே கடும் அச்சு றுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராட வேண்டும். மக்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும், ஏனெனில் அவர்கள்தான் அரசி யலமைப்பின் இறுதிப் பாதுகாவ லர்கள்.

இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. பேசினார்.