india

img

நிதி ஆயோக்கின் அறிக்கை

நாட்டின் வறுமை தொடர் பான நிதி ஆயோக் அறிக்கை (2022-23) வியா ழனன்று வெளி யானது. இந்த அறிக்கை யில், “கடந்த 9  ஆண்டுகளில் 24.82 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண் டுள்ளதாக வும், உத்தரப்பிரதேசம், பீகார், மத்  தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்க ளில் வறுமை விகிதம் கணிசமாக  குறைந்துள்ளதே இதற்கு கார ணம்” என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி ஆயோக் கின் அறிக்கை பாஜகவின் மற்  றொரு பொய் மூட்டை என  காங்கி ரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி யின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனடே செய்தியாளர்கள் சந்திப் பில் கூறுகையில்,”நாட்டில் 24.82 கோடி பேர் வறுமையில் இருந்து  மீண்டு வந்துள்ளனர் என்பது பாஜக அரசின் சமீபத்திய பொய்  மூட்டைகளில் ஒன்று. மக்களவை தேர்தல் வரை இதுபோன்று பல  பொய் மூட்டைகள் அவிழ்த்து விடப் படும். வறுமை குறித்து நிதி ஆயோக் எவ்வாறு கணக்கிட்டது என்பது தெரியவில்லை. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இது பற்றி தகவல் எதுவும் வெளியிடவில்லை.

 முக்கியமாக நிதி ஆயோக்  ஆய்வில் வேலை இல்லா பிரச்  சனை பற்றியே குறிப்பிடவில்லை.  ஆனால் நாட்டின் வறுமையின் உண்மை நிலைமை மிகமோசமாக உள்ளது. விலைவாசி விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள் ளது. தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படு கிறது. அதிக அளவிலான வறுமை யில் மக்கள் வாடுகிறார்கள் என் பதுதான் நிஜம்.  வறுமைப் பட்டியலில் இருந்து  அந்த 25 கோடி பேரை நீக்கி அவர்  களுக்கு வழங்கப்படும் சலுகை களைப் பறிக்க சதி நடக்கிறது. அந்த மக்களுக்கு ரேஷன் பொருட்  கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கு வதை நிறுத்துவதற்கான திட்டம்  தான் நிதி ஆயோக்கின் அறிக்கை’’ எனக் கூறினார்.