india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பிரதமர் மோடி தலைமையில் சனியன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை “இந்தி யா” கூட்டணி ஆளும் கட்சிகள் ஆளும் 8 மாநிலங்களும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர். காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி மாநிலம் என 9 மாநிலங்கள் புறக்கணித்தன.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக பீகார் மாநிலத்தின் சார்பில் துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா கலந்து கொண்டனர். 

மிக முக்கிய கூட்டமான  நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்து கொள்ளாததற்கான காரணம் உடனடி யாக தெரியவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரி, பீகார் மாநிலங்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை
மும்பைக்கு மீண்டும்  மஞ்சள் எச்சரிக்கை

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 11 நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. வியாழ னன்று மும்பை நகருக்கு அதீத கனமழைக் கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சிவப்பு எச்சரிக்கை வெள்ளியன்று காலை வரை நீடித்தது. 

இந்நிலையில், சாண்டாகுரூஸ், கொலாபா உள்ளிட்ட 6 இடங்கள் மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தொடர் கனமழையால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு (ஜூலை 28,29) கனமழை நீடிக்கும் என்றும், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த  கனமழை எச்சரிக்கையால் மும்பையின் மத்தியப் பகுதி, புனே புறநகர், தானே ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப் படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பை
குஜராத்தில் இருந்து துரத்தப்பட்டவர்  இன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் 
அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த சரத் பவார்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் , தற்பொழுதே பாஜக அங்கு பொய்கள் கலந்த வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. கடந்த ஜூலை 21 அன்று புனேவில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,“இந்திய அரசியல் வர லாற்றில் மிகப்பெரிய ஊழல் மன்னன் சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் தலை வர்) தான்” என்று கூறினார்.

அமித் ஷாவின் இந்த இழிவான பேச்சிற்கு மகாராஷ்டிரா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தன்னை  ஊழல் மன்னன் என குறிப்பிட்ட அமித் ஷாவுக்கு சரத் பவார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், “சில நாட் களுக்கு முன்பு நாட்டிலுள்ள ஊழல்வா திகளுக்கு எல்லாம் தலைவன் என்று என்னை அழைத்திருந்தார். இதில் விநோதமான விஷயம் என்னவென்றால், உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா குஜராத்தில் சட்டத்தை தவ றாக பயன்படுத்தியதற்காக அம்மாநி லத்தில் இருந்து வெளியேறும்படி உச்ச நீதிமன்றத்தால் நிர்பந்திக்கப்பட்டார். குஜராத்தில் இருந்து வெளியேற்றப் பட்டவர் இன்று உள்துறை அமைச்சராக உள்ளார்.  நாடு தற்போது யார் கையில் இருக்கிறதோ அவர்களின் வழியில் தான் மக்கள் வழிநடத்தப்பட்டு தவறான பாதையில் செல்வார்கள். இல்லை யென்றால் அவர்கள் நாட்டை தவறான பாதையில் எடுத்துச் செல்வார்கள் என்று நான் 100% நம்புகிறேன்” என பதிலடி கொடுத்துள்ளார்.

அமித் ஷா 2010இல் வெளியேற்றப்பட்டார்..

கடந்த 2010இல் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, சொராபுதீன் ஷேக் போலி என்கவு ண்டர் தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து உச்சநீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்டார். மோடி பிரதமர் ஆன பின்பு 2014இல் அமித் ஷா சொரா புதீன் வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்டார். அமித் ஷா, மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது  மாநில உள்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.