பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட தலித் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலருர் பேராசிரியர் ஷோமா சென்னுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது
கடந்த 2018ஆம் ஆண்டு புனேவில் உள்ள பீமா கோரேகான் எனும் பகுதியில் பெரிய அளவில் தலித் சமூகத்தினர் அணிதிரண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி-மராட்டியர்கள் போரின் 200வது ஆண்டு நினைவு தினத்தைக் கொண்டாடினர். அப்போது இந்த பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு ஒரு நாள் முன்னதாக 'எல்கர் பரிஷத்' எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். அன்றைய ஆளும் மாநில பாஜக அரசு, சாதி வெறியர்களை கைது செய்யாமல், இவ்விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வரவர ராவ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, பாதிரியார் ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வ்ஸ், அருண் ஃபெரீரா உட்பட 16 பேரை கைது செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த நாக்பூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், தலித் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலருமான ஷோமா சென்னுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவை விட்டு வெளியேறக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஷோமா சென்னுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.