எவ்வித அச்சமும், சார்பும் இன்றி தொடர்ந்து செய்திகளை வெளியிடுவோம் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.
குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்குத் தொடர்பு இருப்பதாக கூறி ’இந்தியா: மோடிக்கான கேள்வி’ எனும் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது. இதை தொடர்ந்து, டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ஏதேனும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகத்தை விட்டு வெளியேறியதாகவும், அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், எவ்வித அச்சமும், சார்பும் இன்றி தொடர்ந்து செய்திகளை வெளியிடுவோம் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.