மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்பு இருப்பதாக கடந்த மார்ச் 15 அன்று தெலுங் கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியுமான கவிதா அமலாக்கத் துறை அதிகாரிக ளால் கைது செய்யப் பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாகவே சிபிஐ தரப்பும் கவிதா மீது தனியாக வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கவிதா தாக்கல் செய்தி ருந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதத்திற்கு பிறகு,“மது பானக் கொள்கை வழக்கில் அமலாக் கத்துறை மற்றும் சிபிஐ நேர்மையாக விசாரணை நடத்துகிறதா? வழக்கில் தொடர்புடையவர்களில் சிலரை மட்டும் குற்றவாளிகளாக்கிவிட்டு மற்றவர்களை அரசு தரப்பு சாட்சியாக சேர்ப்பது ஏன்? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடி யாது. குறிப்பாக அரசு தரப்புவாதத்தை ஏற்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கவிதாவிற்கு ஜாமீன் வழங் கப்படுகிறது” என உச்சநீதிமன்ற நீதி பதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தர விட்டது.