india

img

கிறிஸ்துமஸ்: பாஜகவின் இரட்டை வேடம் அம்பலம்

உலகம் முழுவதும் திங்களன்று  கிறிஸ்துமஸ் பண்டிகை கோலா கலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் டிசம்பர் 3-ஆவது வாரத்தி லேயே அதாவது ஒரு வாரத்திற்கு முன்பே  பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனி யார் நிறுவனங்களில் மத பாகுபாடின்றி இனிப்புடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டன.

மத்தியப்பிரதேசத்தில்...
பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்து மஸ் பண்டிகைக்கு பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டதாக சமூகவலைத் தளங்களில் தகவல் வெளியாகிய நிலை யில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசு  அதிகாரிகள் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்  கப்பட்டுள்ளன. ஷாஜாபூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விவேக் துபே  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடை பெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்க ளுக்கு தடை என்ற வார்த்தையை மட்டும்  உச்சரிக்காமல் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து அடாவடியில் ஈடுபட்டுள் ளார். 

இதுதொடர்பாக டிசம்பர் 14-ஆம் தேதி  ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விவேக் துபே  வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்கள்  தங்கள் பெற்றோரின் அனுமதியின்றி கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றால் அரசு மற்றும் தனியார் பள்ளி கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை நாடகங்கள், சாண்டா கிளாஸ் அல்லது கிறிஸ்துமஸ் மரங்கள்  நடுவது போன்ற செயல்களில் ஈடுபடுத்தக் கூடாது. பெற்றோர்களி டையே விரும்பத்தகாத சூழலை ஏற்படுத்  தும் என்பதால் இந்த கட்டுப்பாட்டை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் கடைப்  பிடிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. 

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி யின் இந்த அறிவிப்பால், ஷாஜாபூரில் பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வில்லை.

போபாலில் இந்துத்துவா கும்பல் மிரட்டல்
தலைநகர் போபாலில் உள்ள சமஸ் கிருதி பச்சாவோ மஞ்ச் பள்ளியில் அத்து மீறி நுழைந்த இந்துத்துவா கும்பல் இந்து  குழந்தைகள் பள்ளியில் இருப்பதால்  கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடக்  கூடாது என பள்ளி நிர்வாகத்தை மிரட்டி யுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது. ஆயினும், போலீசார் எவ்வித  நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சமஸ்கிருதி பச்சாவோ மஞ்ச் பள்ளி கிறிஸ்து மஸ் கொண்டாட்டத்தை கைவிட்டதாக தக வல் வெளியாகியுள்ளது. 

கிறிஸ்துமஸ் குடில் அமைத்த வணிக வளாகத்திற்கு மிரட்டல்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பைடராயனபுராவில் உள்ளது மால்  ஆப் ஏசியா வணிக வளாகம். இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில், அலங்காரம் செய்யப்பட்டது. சனி யன்று இந்த மாலுக்கு “பசு பாதுகாவ லர்” அமைப்பைச் சேர்ந்த இந்துத்துவா  ஆதரவாளரான புனித் கெரேஹல்லி மற்றும் நான்கு பேர் கொண்ட கும்பல், “கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டும் ஏன்  அலங்காரம் செய்தீர்கள், இந்து பண்டிகை களுக்கு ஏன் அலங்காரம் செய்வதில்லை?  அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப் படும் 2024 ஜன.22-ஆம் தேதி மால் முழு வதும் அலங்காரம் செய்ய வேண்டும்” என  பாதுகாப்பு உதவி மேலாளரை மிரட்டியது டன், மாலுக்கு வந்த நபர்களையும் தடுத்  துள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரியின் புகாரின் பேரில் புனித் கெரேஹல்லி மற்றும் அவ ரது நண்பர்கள் 4 பேர் மீதும் 506 (எந்த வொரு வகுப்பினரையோ அல்லது சமூ கத்தினரையோ குற்றம் செய்ய தூண்டும் அல்லது தூண்டும் நோக்கம்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), 341 (தவறான கட்டுப்  பாடு), 143 (சட்டவிரோதமான கூட்டம்)  மற்றும் பிற பிரிவுகளின் கீழ் திங்களன்று வழக்குப் பதிவு செய்தனர். புனித் கெரே ஹல்லி மீது ஏற்கெனவே குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாடு கடத்தியதாகக் கூறி இத்ரீஸ் பாஷா என்பவர் கொல்லப்பட்ட வழக்கிலும், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் ஊர்வலம் : பாஜகவின் இரட்டை வேடம்
மத்தியப்பிரதேசம், கர்நாடக மாநி லங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாஜக, கேரளாவில் அரசியல் ஆதாயத்திற்காக “சினேக யாத்திரை” என்ற பெயரில் கிறிஸ்  தவர்களின் வீடுகள் மற்றும் சர்ச்சுகளுக்கு  சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லும்  நிகழ்ச்சியை கடந்த 10 நாட்களாக நடத்தி யது. இதன்மூலம் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது.