india

img

உச்சத்தில் விலைவாசி உயர்வு

நாட்டின் சில்லரை வர்த்தகத்தில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு, செப்டம்பர் மாதத் தில் விலை உயர்வு விகிதம் மோசமான அளவில் உயர்ந்துள்ளது. ஆகஸ்டில் 3.65% இருந்த விலை உயர்வு விகிதம் செப்பம்பர் மாதத்தில் 5.49% ஆக உயர்ந்துள்ளது. அதாவது  ஒரே மாதத்தில் 1.84% உயர்ந்துள்ளது. அதனால் பணவீக்கத்தை 4 சதவீதத் துக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை மீண்டும் அமல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

உணவுத் துறையின் விலையேற்றம் இதற்கு முக்கியப் பங்காற்றியதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என் எஸ்ஓ) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 5.66% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் செப்டம்பரில் 9.24% ஆக உயர்ந்து, ஒரே மாதத்தில் 3.58% அளவில் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி 22 மாதங்களில் முதல் முறையாக எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்தது. என்எஸ்ஓ வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 10.9% ஆக இருந்த தொழில் துறை உற்பத்தி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 0.1% ஆக குறைந்துள்ளது.