india

img

தில்லி ரயில் நிலையங்களில் குற்றங்கள் 105 சதவீதம் அதிகரிப்பு

புதுதில்லி, ஜன.12- தில்லி ரயில் நிலையங்களில் இரண்டு ஆண்டுகளில் குற்றங்கள் 105 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர்  தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. புதுதில்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வே வளாகங்களில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது.

கொலை, கொலை முயற்சி, பாலியல்  தொடர்பான வழக்குகள், ஈவ் டீசிங், விபத்து, காயப்படுத்துதல், ஏமாற்றுதல், மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், சூதாட்டம் போன்ற வழக்குகள் அடங்கும். 2021-ஆம் ஆண்டு, தில்லி காவல்துறை துணை ஆணையர் அலுவலகத் தகவல்படி தில்லியில் 2,108 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டு குற்றச் சம்பவங்கள் 45 சதவீதம் அதி கரித்துள்ளது.  கிட்டத்தட்ட 3,065 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டு நவம்பர் குற்றச் சம்பவங்கள் 105 சதவீதம் அதி கரித்துள்ளது. ஏறத்தாழ 4,342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பழைய தில்லி ரயில் நிலையம், புது  தில்லி ரயில் நிலையங்களில் 2023-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை  3,909 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் திருட்டு வழக்குகள் 93 சதவீதம் அதிகரித்துள்ளன. தங்க நகை உள்ளிட்ட அதிக விலை மதிப்புள்ள பொருட்களை பறிக்கும் சம்பவ மும் பஞ்சமில்லாமல் நடந்தது. 2019-ஆம் ஆண்டு 19, 2022-ஆம் ஆண்டு 85-ஆகவும்,  2023-ஆம் ஆண்டு 96 ஆகவும் நடைபெற்றுள் ளன. பறிப்பு சம்பவங்கள்  405 சதவீதம் அதிகரித்துள்ளது.  

கொள்ளைச் சம்பவங்களைப் பொறுத்த மட்டில் 2023-ஆம் ஆண்டு 22 நடந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு 10 மட்டுமே நடந்துள் ளது. கடத்தல் தொடர்பான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டு- 9, 2022-ஆம் ஆண்டு-14   2023-ஆம் ஆண்டு- 24 என அதிகரித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப் பட்ட வழக்குகள் 2021-ஆம் ஆண்டு- 14. 2022-ஆம் ஆண்டு- 26 ஆகவும், 2023-ஆம் ஆண்டு-104 என உயர்ந்துள்ளது.