ஊதிய உயர்வு கோரி கடந்த ஆண்டு 73 நாட்கள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு அளித்த வாக்குறுதி ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, பிப்ரவரி 29 அன்று ஹரியானா மாநிலம் முழுவதும் சிஐடியு தலைமையில் ஆஷா தொழிலாளர்கள் சங்கம் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஹரியானா பாஜக அரசு பெண்கள் என்று கூட பாராமல் கைது செய்துள்ளது. இந்நிலையில், பாஜக அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக ஹரியானா முழுவதும் உள்ள ஆஷா ஊழியர்கள் சனியன்று மீண்டும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.