india

img

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா!

தில்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு 6 மாத காலமாக திகார் சிறையில் இருந்த தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த செப்டம்பர் 13 அன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவில், "முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது; ஆவணங்களில் கையெழுத்து போடக் கூடாது" என பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு தனது ராஜினாமா கடித்தத்தை தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் வழங்கினார்.
இதை தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் ஒப்புதல் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி புதிய ஆட்சியை அமைக்க அதிஷி உரிமை கோரினார்.