india

img

இந்திய அரசு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பீரங்கி குண்டுகள், வெடி மருந்துகள்

புதுதில்லி, செப். 27- இந்தியாவில் தயாரிக்கப்படும் பீரங்கி குண்டு குப்பிகளும், வெடி மருந்துகளும்  ஐரோப்பிய நாடுகள் வழியாக உக்ரைனுக்கு செல்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது.

சென்னையில் இருந்து மட்டும் மோட்டார் ரக பீரங்கிகளில் பயன் படுத்தப்படும் 120 மி.மீ மற்றும் 125 மி.மீ அளவுள்ள 10 ஆயிரம் குண்டுகள் (வெடிமருந்து இல்லாத குப்பிகள்) ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்து வெடி மருந்துகள் நிரப்பப்பட்டு  உக்ரைனுக்கு அனுப் பப்பட்டுள்ளது.

மேலும் 2022 பிப்ரவரி முதல் 2024 ஜூலை வரை  இந்திய அரசின் ஆயுத நிறுவனமான ‘யாத்ரா இந்தியா’ 3.5 கோடி மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு எல்15எ1 - ரக குண்டுகளுக்கான குப்பிகளை அனுப்பி வைத்துள்ளது.

இந்த தகவல்கள் இந்தியா மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் வணிக ரீதியாக கிடைக்கும் சுங்கத் தரவு களின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்த பகுப் பாய்வில் வெளி வந்துள்ளது.    

இந்திய அரசு ரஷ்யாவுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவான வெளியுறவுக் கொள்கையை கொண்டு இருந்தாலும், பாஜக அரசு நடைமுறையில் நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாலஸ்தீனர்களை இனப்படு கொலை செய்வதற்காக சென்னை யில் இருந்து வெடி மருந்து கள், துப்பாக்கிக் குண்டுகளை சித்தார்த் லாஜிஸ்டிக்ஸ் நிறுவ னத்தின் வாயிலாக அனுப்பியது. மேலும் அதானி நிறுவனம்,  இஸ் ரேல் நிறுவனத்துடன் இணைந்து இனப்படுகொலைக்கான பிரதான ட்ரோன்களை உற்பத்தி செய்து அனுப்பி வருகிறது.

இந்த அனைத்து ஆயுத ஏற்று மதிகளையும் தடை இன்றி பாஜக அரசு அனுமதித்து வருகிறது. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் எதிரான தாகும்.      

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தரப்பில் இருந்து இந்தியா, செக் குடியரசு, உக்ரைன், ஸ்பெயின், இத்தாலி நாடுகளின் பாதுகாப் புத்துறை அமைச்சர்களிடம் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி களுக்கு முறையாக எந்த பதிலும் வரவில்லை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.