ஏப்ரல் 10 ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களில் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஏப்ரல் 10 ஆம் தேதிமுதல் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் போடப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் ஒன்றிய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.