அண்ணாமலை பாஜகவில் குற்றவாளிகளை சேர்த்து வருகிறார் என்று நாங்கள் சொன்ன குற்றச்சாட்டை பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறியுள்ளார். நாங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கு இன்று தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். பாஜகவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் பாமக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை சேர்த்து வாங்கியுள்ள வாக்குகள் தானே தவிர, பாஜக தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை என்று புதுக்கோட்டையில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.