india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்திய நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது வரலாறு காணாதது. மோடி அரசு ஜனநாயகத்தையே சட்ட விரோதமானதாக மாற்றியிருக்கிறது. ஜனநாயக த்தின் மீது புல்டோசர் ஏற்றி அழித்திருக்கிறது. குளிர்கால கூட்டத்தொடரின் அனைத்து நாட்களி லுமே தொடர்ந்து உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட அட்டூழியம் நடந்திருக்கிறது. 

இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் தனிநபர்கள் அல்ல; மாறாக அவர்கள் கோடிக்கணக்கான மக்களின் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ததன் மூலம் கோடானு கோடி  மக்களின் குரலை நசுக்கியிருக்கிறது மோடி அரசு.

மோடி அரசாங்கத்தின் இத்தகைய பாசிச அடக்கு முறையும் அராஜகமும் நிச்சயம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும். நிரந்தரமான அரசாங்கங்கள் இருந்ததாக எங்குமே வரலாறு இல்லை.