நாடு முழுவதும் மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில்லறை விற்பனைக்கான விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
உக்ரைன் ரஷ்ய போர் நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிக அளவில் டீசலை கொள்முதல் செய்யும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.94.14-ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, மொத்த வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ.122.05-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தில்லியில் டீசல் விலை ரூ.86.67-இல் இருந்து ரூ.115-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலமாக மாநில போக்குவரத்துக் கழகங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.