india

img

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி கல்லூரியில் கருத்தரங்க கூடத்தில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 
இந்த பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.