india

ஊரக வேலை உறுதித் திட்டத்தையும் கொலை செய்வதா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதியளிப்புச் சட்டம்  நாடாளுமன்றத்தின் மூலமாக நிறை வேற்றப்பட்டுள்ளதை ஒன்றிய பாஜக அரசு புறந்தள்ளி, தொடர்ச்சியாக அதன் முக்கிய விதிகளைத் திருத்தம் செய்யும் போது, நாடாளுமன்றத்தின் முன் வைக்காமல் தானடித்த மூப்பாக திருத்தியும் சிதைத்தும் வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் ஆதார்  இணைப்புடன் கூடிய ஊதிய பரிவர்த்தனை செய்யும் வகையில் வேலை அட்டைகளை மாற்றிட அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான தரவுத்தளத்தையும் உருவாக்கி வெளியிட்டது. தரவுத்தளத்தில் மாநிலங்கள் ஆதார் அடிப்படையில் வேலை அட்டை புதுப்பிப்பதை செயல்படுத்தின.

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை யுறுதித் திட்டத்தில் நாடு முழுவதும் 25.25 கோடி தொழிலாளர்கள் பதிவுசெய்து வேலை  அட்டைப் பெற்றுள்ளனர். இவர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தொடர்ச்சியாக வேலைக்குச் செல்பவர்கள் என வகைப் படுத்தப்பட்டு உள்ளனர். எஞ்சிய 11 கோடி பேர் செயல்படாத வேலை அட்டை வைத்திருப்பதாக கருதுகின்றனர்.

நிதி ஒதுக்கீட்டை மிக மோசமாக வெட்டிச் சுருக்கி யும், முறையாக வேலை கொடுக்காம லும் பயன்பாட்டில் இல்லாத வேலை அட்டை கள் என சரி பாதி தொழிலாளர்களை திட்டத்தி லிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.  

ஆதார் இணைப்புடன் கூடிய ஊதிய பரிவர்த்தனைக்கான நடவடிக்கையை அறிவித்த ஒன்றிய பாஜக அரசு மாநிலங்கள் அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கான உதவியை செய்யாமல் திடீரென்று கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் தரவுத்தளத்தை கால நீட்டிப்பு செய்யாமல் மூடிவிட்டது. இதனால் செயல்பாட்டில் உள்ள 14 கோடி வேலை அட்டை வைத்திருப்போரிலும் 1 கோடியே 80 லட்சம் பேர் இன்னும் பதிவு செய்யவில்லை. இவர்களை ஊரக வேலை திட்டத்தின் பயனாளிகள்  பட்டியலில் இருந்து வெளியேற்றும் சூழ்நிலை தற்போது ஒன்றிய பாஜக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் சில லட்சம் பயனாளிகள் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தச் செயலை அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இது அப்பட்டமான சட்ட விதிமீறல் ஆகும். ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்ற பத்தாண்டு காலத்தில் ஊரக வேலைத் திட்டத்தை சிதைப்பதற்கான அனைத்து வித மான முயற்சிகளையும் மேற்கொண்டு வரு கிறது. அதன் நவீன தாக்குதல்தான் தற்போது ஆதார் இணைப்புடன் கூடிய ஊதிய பரி வர்த்தனை என சொல்லி மேலும் ஒரு தாக்கு தலை கிராமப்புற ஏழைகள் மீது மோடி அரசு கொடுத்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு உட னடியாக இதைத் திரும்பப்பெற வேண்டும்.  கண்டன இயக்கம் சாதாரண ஏழை - எளிய மக்களுக்காக இருக்கும் ஒரே திட்டத்தையும் ஒன்றிய பாஜக  அரசு கொலை செய்வதை அனுமதிக்க முடி யாது.

மோடி அரசின் இந்த கேடுகெட்ட செயலை கண்டித்து அனைத்து கிராமங்களி லும், நகரங்களிலும் ஒன்றிய அரசு  அலு வலகங்கள் முன்பாக மக்களை திரட்டி வலு வான கண்டனத்தை முழங்குமாறு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் அனைத்து மட்ட கமிட்டிகளை யும் கேட்டுக்கொள்கிறோம்.