தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டி ருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது: தில்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பா ளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அம லாக்கத் துறையினரால் கைது செய்யப் பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் மக்கள் மத்தியில் தெரிய வந்த பின்னர், மோடி அரசாங்கத்தின் ஊழல் நடைமுறை கள் வெட்ட வெளிச்சமாகி, மக்கள் மத்தி யில் பாஜகவின் மீதும் மோடி அரசாங்கத் தின் மீதும் அதிருப்தி அதிகரித்துக் கொண் டிருப்பதன் காரணமாக மோடி அரசாங்க மும், பாஜக-வும் மிகவும் பீதியடைந் துள்ளன என்பது தெளிவாகவே தெரி கிறது.
எனவே, பாஜகவும் மோடி அரசாங்க மும் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழி வாங்கும் நோக்கில் குறிவைத்துச் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. கெஜ்ரிவால், இந்தியா கூட்டணியில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது முதலமைச்சர் ஆவார். இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக வரவிருக்கும் தேர்தலில் பாஜக-வை முறியடிப்பதற்காக அணிதிரண்டுள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்க ளையும் பாஜக குறிவைத்திருக்கிறது.
ஆனால், அதே சமயத்தில் அது பாஜக பக்கம் சாய்ந்திடுபவர்களைப் பாதுகாத்தி டுவதுடன், விருதுகள் கொடுத்து அர வணைத்துக் கொள்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய் யப்பட்டிருப்பதற்கு எதிராக தில்லியிலும், மற்றும் நாடு முழுவதும் இந்தியா கூட்ட ணியின் சார்பில் நடைபெறும் கிளர்ச்சிப் போராட்டங்களில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக் கிளைகள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அரசியல் தலைமைக் குழு அறைகூவல் விடுக்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)