புதுதில்லி, பிப். 6 - அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை, தங்களின் கைப்பாவையாக மாற்றி வைத்திருக்கும் ஒன்றிய பாஜக அரசு, இந்த அமைப்புக்களை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக ஏவி, அங்கு அரசியல் குழப்பத்தையும், ஆட்சிக் கவிழ்ப்பையும் அரங்கேற்ற முயற்சித்து வருகிறது. இதில், ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை, முதல்வ ராக இருக்கும்போதே கடந்தவாரம் கைது செய்ததுடன், அவரை முதல்வர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ய வைத்தது.
தற்போது பார்வையை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கித் திருப்பியுள்ளது. தில்லி அரசுக்கான மதுபானக் கொள்கையை உருவாக்கியதில் ஊழல் செய்ததாக கூறி, தில்லியின் துணை முதல்வர், அமைச்சர்களை கைதுசெய்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது முதல்வர் கெஜ்ரிவாலையும் கைதுசெய்து சிறை யிலடைக்க தீவிரமாகி வருகிறது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஐந்துமுறை சம்மன் அனுப்பி கெஜ்ரி வாலுக்கு நெருக்கடி கொடுத்துவரும் அமலாக்கத்துறை, பிடியை மேலும் மேலும் இறுக்கத் துவங்கியுள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தன்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கவே, சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அரசியல் சதியின் ஒரு பகுதிதான் சம்மன் என்றும் கூறிய கெஜ்ரிவால், பாஜக-வில் இணையு மாறு தனக்கு அழுத்தம் கொடுக்கப் படுவதாகவும், ஆனால், பாஜக-வுக்கு அடிபணியப் போவது இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான், அமலாக்கத்து றையினர் செவ்வாயன்று காலை முதல் தில்லியில் 12 இடங்களில் சோதனை யில் ஈடுபட்டனர். இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீட்டிலும், கெஜ்ரிவாலின் உதவி யாளர் பிபவ் குமார், ஆம் ஆத்மி தில்லி பிரிவு முக்கியத் தலைவர் வீடுகளி லும் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.