அதானி குழுமம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பது செபி அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அளவில் கடன் பெற்றதாகவும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து விசாரணை நடத்த செபிக்கு உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், அதானி குழுமம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பது செபி அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
நேரடி முதலீட்டில் ஒரு வெளிநாட்டினர் 10% மட்டுமே இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியும் என்ற விதி இருக்கும் நிலையில், அதனை அதானி குழுமம் மீறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.