ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக ஸ்ட்ரீ மிங் செய்ததில் நடிகை தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிரா சைபர் செல் விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பி யுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி சொகுசு விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க் கைக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழு வதும் மே 5 அன்று நடைபெற உள்ள நிலையில், மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமைய இருக்கிறது என்பதற்கான நகர் விவரம் (சிட்டி இன்டிமேஷன்) வியாழனன்று வெளியிடப் பட்டது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் தரப் பட்டுள்ளதாகவும், லஞ்சம் அளித்தவருக்கு ரூ.195 கோடி லாபம் கிடைக்கும் வகையில், அவருக்கு சாத கமாக மதுபான கொள்கையில் திருத்தம் செய்து முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடு நடந்த போது கெஜ்ரிவால் 170 மொபைல் போன் களை பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு மூலம் தகவல் தெரி வித்துள்ளது.
ரூ.3.20 கோடி செல்லாத ரூ.2,000 நோட்டு களை திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கி யில் கொடுத்து மாற்றியது.
தில்லியின் மக்களவை தேர்தலுக்கான பிரச்சா ரத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலின் மனைவி சுனிதா இறங்க உள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. தில்லியில் உள்ள 7 மக்க ளவை தொகுதிகளுக்கு 6ஆவது கட்டத்தில் (மே 25) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
எதிர்க்கட்சிகள் எனது சகோதரியை பயன் படுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் புலம்பியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்புப் படையின ருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுதில்லி
உச்சநீதிமன்ற வழக்குகளை இனி வாட்ஸ் அப் மூலம் அறிந்துகொள்ளலாம்
உச்சநீதிமன்றத்தின் வழக்குப் பட் டியல்கள், காரணப் பட்டியல் மற் றும் வழக்குப் பதிவுகள் தொடர் பான தகவல்கள் இனி வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதா வது: “வாட்ஸ் அப் என்பது நமது அன்றாட வாழ்வில் எங்கும் நிறைந்த ஒரு சேவை யாக உள்ளது. மேலும் இது ஒரு சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு கருவியாக உள்ள நிலையில், நீதியை அணுகுவதற் கான உரிமையை வலுப்படுத்தவும், நீதித் துறை அமைப்பில் வெளிப்படைத்தன் மையை அதிகரிக்கவும், உச்சநீதிமன்றம் அதன் தகவல் தொழில்நுட்ப சேவைகளு டன் வாட்ஸ் அப் சேவைகளை ஒருங்கி ணைக்கவுள்ளது. இந்திய உச்சநீதிமன் றம் 75ஆவது ஆண்டில் இந்த முயற்சி யைத் தொடங்கியுள்ள நிலையில், இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சாத் தியம் உள்ளது. இந்த புதிய வசதி காகி தத்தையும் நமது பூமியையும் சேமிப்ப தில் நீண்ட தூரம் செல்லும்” என அவர் கூறி னார். வழக்கு விபரத்தை வாட்ஸ் அப் மூலம் அறிந்துகொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் திட்டத்திற்கு நாடு முழு வதும் வரவேற்பு குவிந்துள்ளது.
புதுதில்லி
கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 12% வரை சரிவு முக்கிய தனியார் வங்கிகளில்
முக்கிய தனியார் வங்கிகளில் ஒன் றும், இந்தியாவில் முதன் முத லாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை தொடங்கும் திட்டத்தை அறிவித்த வங்கியுமான கோடாக் மஹிந் திரா வங்கி 2022, 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் விதிமுறைகளை மீறியது தொடர்பாக புதிய வாடிக்கையாளர் களை சேர்க்கவும், ஆன்லைன் மூலம் புதிய கிரெடிட் கார்டு வழங்கவும் புத னன்று ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஏற்கனவே வங்கி மூலம் செயல்படுத்தி வரும் பழைய சேவைகள் அப்படியே தொடரலாம் என ரிசர்வ் வங்கி சலுகை யை அறிவித்தது.
இந்நிலையில், தடை எதிரொலியால் வியாழனன்று பங்குச்சந்தையில் 12% (தோராயமாக) அளவில் கோடாக் மஹிந் திரா வங்கியின் பங்குகள் சரிந்துள்ளன. தற்போது வங்கியின் ஒரு பங்கின் விலை ரூபாய் 1,658.70ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.