நாட்டில் ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
புது தில்லியில் வியாக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் பேசிய அமித்ஷா இவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிகழ்வில் பேசிய அமித்ஷா, மத்திய அரசு வகுக்கும் 70 சதவிகித கொள்கைகள் தற்போது ஹிந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். ஒன்றிய அரசின் அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒற்றுமையை அதிகரிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. எனவே, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிப்பொறுப்பு ஏற்றதிலிருந்து தொடர்ந்து ஹிந்தி மொழியை திணித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது அமித்ஷா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பல விவாதங்களில் பேசுயதுபோது ஒன்றிய பாஜக பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கும், ஹிந்திக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் பிற மாநில மொழிகளை புறம் தள்ளுகிறது என்பதை ஆதாரத்துடன் பதிவு செய்தார்.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவை சிதைக்க பாஜக தொடர்ந்து ஒரே நாடு. ஒரே மொழி, ஒரே தேசம் என்கிற முழக்கத்தை முழங்கி வந்த நிலையில் தற்போது அதற்கான முன்னோட்டமாக ஒரே மொழி என்கிற வாதத்திற்கு வந்திருக்கிறார்கள் இது பன்மைத்துவம் கொண்ட இந்தியாவுக்கு ஆபத்து என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்தித்திணிப்பிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வேண்டிவருமென பலரும் எச்சரிக்கை விடுத்துத்துள்ளனர்.