india

தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி: ஆம் ஆத்மி அறிவிப்பு

மக்களவை தேர்த லுக்கு இன்னும் 4  மாதங்களே உள்ள  நிலையில், பாஜகவை வெளி யேற்ற 28 எதிர்க்கட்சிகள் ஒன்  றிணைந்துள்ள “இந்தியா” கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு வேலையில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஞாயிறன்று காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகளின் தொகுதி பங்கீடு  நிறைவடைந்த நிலையில்,  திங்களன்று காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்தது.

இந்நிலையில், காங்கி ரஸ் கட்சி உடன் தொகுதி பங்கீடு தொடர்பான கூட்டத்  தில் பங்கேற்ற ஆம் ஆத்மி  கட்சியின் தில்லி ஒருங்கி ணைப்பாளர் கோபால் ராய்,  “தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட  5 மாநிலங்களில் காங்கிரசு டன் கூட்டணிக்கு தயாராக உள்  ளோம்” எனக் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”ஆம் ஆத்மி கட்சியும், காங்கி ரசும் “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கின்றன.  மேலும் வரவிருக்கும் மக்க ளவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து  விவாதிக்க இவ்விரு கட்சி களிடையே திங்களன்று ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்தில் பேச்சு வார்த்தை சுமூகமாக நிறைவு பெற்றதால் தில்லி, பஞ்சாப்,  ஹரியானா, கோவா, குஜ ராத் ஆகிய 5 மாநிலங்களில் “இந்தியா” கூட்டணியில் காங் கிரஸ் உடன் இணைந்து போட்டியிடும் நிலைபாட்டை எடுத்துள்ளோம். தொகுதி கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என அவர் கூறி யுள்ளார்.  

கூட்டணி தொடர்பாக ஆம் ஆத்மி தனது நிலை பாட்டை அறிவித்துள்ள நிலை  யில், காங்கிரஸ் கட்சி இது  தொடர்பாக எவ்வித கருத் தும் தெரிவிக்கவில்லை என்  பது குறிப்பிடத்தக்கது.