வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி செய்து வரு கிறது. முதல்வராக பைரன் சிங் உள்ளார். தேர்தல் கால வாக்குறுதி மூலம் மணிப்பூரில் பாஜகவின் வகுப்புவாத அரசியலை கட்ட விழ்த்து விட்டது. பாஜகவின் வகுப்பு வாத அரசியலுக்கு ஆதரவாக, அதாவது மெய்டெய் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க பரி சீலிக்க வேண்டுமென மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, நாகா இன பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் மெய் டெய் மக்கள் வன்முறையை பற்ற வைக்க அன்று முதல் கடந்த 11 மாத காலமாக தற்போது வரை மணிப் பூர் மாநிலம் வன்முறைக்களமாக இருந்து வருகிறது. இந்த வன் முறைக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக வாழ்ந்து வருகின்றனர். வன் முறைக்கு காரணமான மெய்டெய் மக்களுக்கு பழங்குடியின அந் துஸ்து வழங்க பரிந்துரைத்த தீர்ப்பை மணிப்பூர் நீதிமன்றம் ரத்து செய்த பின்பும் மணிப்பூரில் வன்முறை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், “பிரதமர் மோடி அவர்களே, ஒரு முறையாவது மணிப்பூருக்குச் செல்லுங்கள்” என சர்வதேச குத்துச்சண்டை போட்டி யில் இந்திய வீரர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். உத்த ரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்று வரும் “எம்எப்என் 14” என்ற சர்வதேச குத்துச்சண்டை (கலப்பு தற்காப்புக்கலை பிரிவு) தொடரில் இந்தியா சார்பில் குத்துச் சண்டை வீரரான சுங்ரெங் கோரன் பங்கேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில், “இது என்னுடைய தாழ் மையான வேண்டுகோள். மணிப்பூ ரில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக வன் முறை தொடர்ந்து நடக்கிறது. அப்பாவி மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், உயிர்பிழைத்தவர்கள் பலர் நிவாரண முகாம்களில் பொழுதை கழித்து வருகின்றனர். ஆனால் நிவாரண முகாம்களிலும் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக் குறை உள்ளது. குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. மணிப்பூர் மக்களின் எதிர்காலம் தெளிவாக இல்லை. பிரதமர் மோடி அவர்களே, தயவு செய்து ஒரு முறையாவது மணிப்பூருக்குச் சென்று மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும்” என குத்துச் சண்டை மேடையிலேயே கண்ணீர் மல்க சுங்ரெங் கோரன் கூறி னார்.
மோடி - பாஜக அதிர்ச்சி
“எம்எப்என் 14” குத்துச்சண்டை தொடர் சர்வதேச அளவிலானது என்ற நிலையில், உலகின் பல் வேறு நாடுகளில் இருந்து வந் துள்ள குத்துச்சண்டை வீரர்கள் நொய்டாவில் முகாமிட்டுள்ளனர். சுங்ரெங் கோரன் மணிப்பூ ருக்காக குரல் கொடுத்த பொழுது, குத்துச்சண்டை மைதானத்தில் இந் தியர்களை விட சர்வதேச ரசிகர் களே அதிகம் இருந்தனர். மேலும் சர்வதேச தொலைக்காட்சிகள் சுங் ரெங் கோரனின் பேச்சை நேரடி யாக ஒளிபரப்பியதால் மணிப்பூர் வன்முறை விவகாரம் மீண்டும் சர்வ தேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி ஒவ்வொரு மாநி லத்திலும் ஷூட்டிங் கச்சேரி நிகழ்த்தி வரும் நிலையில், சுங் ரெங் கோரனின் பேச்சால் பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
“மணிப்பூரைச் சேர்ந்த சுங்ரெங் கோரன் குத்துச்சண்டை அரங்கில் தனது மாநில மக்களுக்கு அழுகிறார். பிரதமர் மோடி மணிப் பூர் மக்கள் குடும்பத்தில் ஒருவ ராக இருந்திருந்தால், இன்று மணிப் பூரின் ஒவ்வொரு குடிமகனும் அழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டி ருக்காது” என இளைஞர் காங்கி ரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி யுள்ளார்.
கலப்பு தற்காப்புக்கலை பிரிவு (பக்கம் 8)