india

img

நாடாளுமன்ற பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பியதால் ஆத்திரம்

புதுதில்லி, டிச. 18 - நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குப்பிகளை வீசி அத்துமீறிய தாக மொத்தம் 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் மீது, கடுமை யான ‘உபா’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் நாடாளு மன்றத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கிய பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இது பற்றியும் நாடாளுமன்ற பாதுகாப்பில் மோடி அரசு காட்டியிருக்கும் அலட்சி யம் குறித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்து போராடி வரும் நிலை யில், எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு, மாநி லங்களவையில் ஒருவர், மக்கள வையில் 13 பேர் என மொத்தம் 14 எதிர்க்கட்சி எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழுவதும் நாடாளு மன்றத்திற்கே வரமுடியாதபடி இடைநீக்கம் செய்தது. 

மேலும் 33 எம்.பி.க்கள் இடைநீக்கம்
திங்களன்று நாடாளுமன்ற அவைகள்  மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வழக்கம் போல தங்களின் கோரிக்கையை முழக்கங்களாக எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். ஆனால், கோரிக்கையை ஏற்காத சபாநாயகர் ஓம் பிர்லா, பகல் 12:00 மணி, 2:00 மணி, 2:45 மணி என அடுத்தடுத்து 3 முறை அவை ஒத்திவைத்துக் கொண்டே சென்றார். அத்துடன், 2.45 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையேயும், மோடி அரசு ‘அஞ்சல் அலுவலக மசோதா 2023’-ஐ  நிறைவேற்றிக் கொள்வதற்கு அனுமதி அளித்து. அவையை 3 மணிவரை ஒத்திவைத்தார். 

பின்னர், 3 மணிக்கு அவை கூடியபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் 33 பேரை கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரக லாத் ஜோஷி கொண்டு வந்தார். அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேறியதாகவும் அறிவிக்கப்பட்டது. காங்கிரசை சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், திருநாவுக் கரசர் உட்பட 11 எம்பிக்களும்,  திமுக வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் உட்பட 9 எம்பிக்களும், திரி ணாமுல் கட்சியின் சவுகதா ராய்  உள்பட 9 எம்பிக்களும், முஸ்லிம் லீக்-கின் 2 எம்பிக்கள், மற்றும் ஜனதா தளம், ஆர்எஸ்பி கட்சிகளின் தலா ஒரு  எம்.பி.க்கள் என மொத்தம் 33 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

மாநிலங்களவையில் 46 பேர்

மாநிலங்களவையிலும், இதே தந்திரத்தைக் கடைப்பிடித்த பாஜக அரசு, 11.30, பிற்பகல் 2.00 மணி என  இரண்டு முறை அவை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் 3-ஆவது முறை அவைகூடியபோது, ஜம்மு - காஷ்மீர் மறுவரையறை இரண்டாவது திருத்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றிக் கொண்டது. அதன்பின்னர், அமளியில் ஈடுபட்டதாக கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ.ரஹீம், டாக்டர் சிவதாசன் உள்ளிட்ட 3 எம்.பி.க்கள், காங்கிரசின் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 18 எம்பிக்கள். திமுக-வின் 5 எம்.பி.க்கள், சிபிஐ-யின் 2 எம்பிக்கள்.  திரிணாமுல் கட்சியின் 7 எம்.பி.க்கள், ஆர்ஜேடி, ஜேடியு, சமாஜ்வாதியின் தலா 2 எம்.பி.க்கள், தேசியவாத காங்கிரஸ், ஜேஎம்எம், கேசி(எம்), அஞ்சலிக் கானா மோர்ச்சா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்.பி. என மொத்தம் 45 எம்பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதன்மூலம், மோடி அரசானது, 92 எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழு வதும் அவைக்கு வரவிடாமல் தடுத்து எதேச்சதிகாரத்தை அரங்கேற்றி யுள்ளது.

சிபிஎம் எம்.பி.க்கள் டாக்டர் ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ.ரஹீம் உள்ளிட்ட 11 எம்.பி.க்கள் உரிமைக்குழு அறிக்கை அளிக்கும் வரை மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்றத் திற்குள் நுழைய முடியாத நிலையை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது.