புதுதில்லி, ஏப். 12 - 18-ஆவது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.19 அன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தோல்வி பயத்தில் உள்ள மோடி அரசு எதிர்க்கட்சி களை ஒடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மூலம் நெருக்கடி அளித்து வருகிறது. அதாவது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களை தவிர, “இந்தியா” கூட்டணி தலைவர்களுக்கு சம்மன் மூலம் நெருக்கடி அளித்தும், கைது நடவடிக்கை மூலம் சிறையில் அடைப்பதும் தொடர்ந்து அரங்கேறி வரு கிறது. மேலும், தேர்தல் நேரத்தில் எதிர்க் கட்சிகளை திவாலாக்கும் நோக்கத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு வருமானவரித்துறை மூலம் அபராதம் விதித்தும் மோடி அரசு எதேச்சதிகாரத்தை கடைப்பிடித்து வரு கிறது.
இந்நிலையில், இந்த சம்பவங்களைக் கண்டித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடி தம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில், “எதிர்க்கட்சிகள் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டு தேர்தல் ஆணை யம் மவுனமாக இருக்கக் கூடாது. அரசியல் சட்ட 324-ஆவது பிரிவின்படி அம லாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்பு களை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வர வேண்டும். ஒன்றிய அரசைப் போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி னால் விளைவுகள் கடுமையாக இருக்கும். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத பெரும் குழப்பங்களை விளைவிக்கும். ஊழ லை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் பழிவாங்கு வது தவறு. தேர்தல் ஆணையம் தங்களின் கடமையை மறந்து உடனடி நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக் கிறது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களைப் போக்க ஆணையம் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. ஆளுங்கட்சியினர் நடத்தை விதி களை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது’ என்று கடிதத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.