புதுதில்லி, ஜூன் 12- இந்தியாவில், 71 சதவீதம் பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்க வில்லை. போதிய ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைக்காமல் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்து உள்ளது. உலக மக்கள்தொகையில் 42 சதவீதம் பேர் ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் 71 சதவீதம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை. இதன் விளைவாக, நீரிழிவு, சுவாச நோய், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற உணவு ஆபத்து தொடர்பான நோய்களால் ஆண்டுதோறும் 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறக்கின்றனர். உணவுப் பொருட்களின் விலை களையும் அறிக்கை ஆய்வு செய்துள் ளது. கடந்த ஆண்டு, நுகர்வோர் உணவு விலைக் குறியீடு 327 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 84 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங் களில் மேற்கு வங்கம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், அசாம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நகரங்களிலும், ஆந்திராவில் நகரங்களை விட கிராமங்களிலும் உணவுப்பொருட் களின் விலை அதிகமாக அதிகரித்துள் ளது. பீகார், கர்நாடகா, கேரளம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரதான நகரங்களில் பணவீக்கம் அதிகமாக இருந்துள்ளது. உணவுத் துறையில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறினாலும் உணவு முறை ஆரோக்கிய மானதாக இல்லை. நாட்டில் ஊட்டச் சத்து குறைபாடு ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் உள்ளது.