பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தற் போது பட்ஜெட் கூட் டத்தொடர் நடைபெற்று வரு கிறது. இந்த கூட்டத்தொடரில் அம் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா, “மாநிலத் தில் பாலியல் வல்லுறவு மிகமோச மாக அதிகரித்து வரும் சூழலில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து புள்ளிவிபரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும்” என கூறினார்.
இந்த கேள்விக்கு அம்மாநில உள்துறை அமைச்சகம் அளித்த பதில் அறிக்கையில், “2020-21ஆம் ஆண்டில் மாநிலத்தில் 2,016 பாலியல் வல்லுறவு சம்பவ வழக்குகளும், 27 கும்பல் வல்லு றவு வழக்குகளும் பதிவாகியுள் ளன. 2021-22இல் 2,229 பாலியல் வல்லுறவு வழக்குகளும், 32 கும் பல் வல்லுறவு வழக்குகளும், 2022-23ஆம் ஆண்டில் 2,209 பாலியல் வல்லுறவு வழக்கு களும், 36 கும்பல் வல்லுறவு வழக்குகளும் பதிவு செய்யப்பட் டுள்ளன. பலாத்கார வழக்கில் தொடர்புடைய 194 குற்றவாளி கள் இன்னும் கைது செய்யப்பட வில்லை.
இதில் 67 பேர் ஆறு மாதங்களாகவும், 63 பேர் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தலைமறைவாகவும், 64 பேர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாகவும் உள் ளனர்” என கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலி யல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக குஜராத் மாநில அர சின் அறிக்கை நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற் படுத்தியுள்ளது. காரணம் குஜ ராத் மாநில அரசின் அறிக்கையை உற்றுநோக்கினால் கடந்த 2023 இல் ஒவ்வொரு நாளும் சராசரி யாக 6 பெண்கள் பாலியல் வல்லு றவுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்க ளில் பெண்களுக்கு எதிரான குற் றங்கள் மிக மோசமான அளவில் அரங்கேறி வருகின்றன. இத னால் பெண்களுக்கு பாதுகாப் பில்லா மாநிலங்களாக பாஜக ஆளும் மாநிலங்களே உள்ள நிலையில், இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் பிரதமர் மோடியின் சொந்த மாநி லமான குஜராத் மாநிலம் டாப் கியரில் சென்று கொண்டுள்ளது.