india

img

உ.பியில் கடும் பனிமூட்டம் - கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடும் பனிமூட்டம் காரணமாக, கார் ஒன்று விபத்துக்குள்ளானதில், இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தலைநகர் தில்லி உட்பட வட மாநிலங்களில், கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் வெட்பநிலை 2.2 டிகிரியாக பதிவாகி உள்ளது. இந்நிலையில், தில்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் 11 பேருடன் வந்த கார் ஒன்று, தன்கவூர் என்ற பகுதியில் சென்றபோது, பனிமூட்டத்தால் கார் அங்குள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது. இதையடுத்து மீட்பு பணியினர் அங்கு விரைந்து வந்து கால்வாய்க்குள் விழுந்த காரை வெளியே எடுத்தனர். இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காயமடைந்த எஞ்சிய 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

;