இந்தியாவில் ஒரே நாளில் 594 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 594 பேர் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,669 ஆக உயர்வு. கேரளாவில் 3 பேர், கர்நாடகாவில் 2 பேர், பஞ்சாப்பில் 1 என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவாவில் 19 பேருக்கு, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஜேஎன்.1 வகை தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.