india

img

கோவிட்-19: 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5,611 பேருக்கு பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், 5,611 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 106,750 பேர் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3303 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,611 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; 140 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 42,298 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1325 பேர்  உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 12,448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேர் உயிரிழந்துள்ளனர்.  குஜராத் மாநிலத்தில் 12,140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 719 பேர்   உயிரிழந்துள்ளனர்.   
 

;