india

img

56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், சத்தீஷ்கர், குஜராத், அரியானா, ஆந்திரா, மத்தியபிரதேசம், இமாச்சலபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய 13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறையவடைய உள்ளது. அதேபோல், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் 3-ஆம் தேதியுடன் நிறையவடைய உள்ளது. இந்த நிலையில், 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15-ஆம் தேதி; வேட்புமனு பரிசீலனை நடைபெறும் நாள் பிப்ரவரி 16-ஆம் தேதி; வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப்பெறும் கடைசி நாள் பிப்ரவரி 20-ஆம் தேதி; தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 27-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.