india

img

4 மாநில சட்டமன்ற தேர்தல் : விரைவில் “இந்தியா” கூட்டணிக் கூட்டம்

ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க் கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற வுள்ளது. இந்த தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அடுத்து தேர்தல் தேதி அறிவிப்பது மட்டும்தான் பாக்கி. 

18ஆவது மக்களவை தேர்தலில் பாஜ கவை பெரும்பான்மை இல்லாமல் ஆக்கி யதை போல 4 மாநில சட்டமன்ற தேர்தல் களிலும் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்த “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக கடந்த வாரமே தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடியும் முன்னரே தில்லியில் 4 மாநில சட்டமன்ற தேர்தல்  குறித்து ஆலோசனை நடத்த “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடை பெறவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இந்த கூட்டத்திற்கான ஒருங்கி ணைப்பு வேலையை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலை வருமான உத்தவ் தாக்கரே துவங்கியுள்ள தாகவும், அவர் தில்லியில் முகாமிட்டுள்ள தாகவும் மராட்டிய மற்றும் ஆங்கில நிறு வனங்கள் செய்திகளை வெளியிட்டுள் ளன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12 அன்று நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.