ஐஸ்வால்
மிசோரத்தில்
ரூ.32 கோடி அளவில் போதைப் பொருட்கள் பறிமுதல்
மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் போதைப் பொ ருட்கள் கடத்தல், புழக் கம் மிக மோசமான அளவில் அதிகரித்துள் ளது. தினமும் நாடு முழுவதும் கோடிக்க ணக்கான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்வது தொடர்கதையாக உள்ள நிலையில், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோ ரம் மாநிலத்தின் தலைநகரான ஐஸ்வால் நகரில் ரூ.32 கோடி அளவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. ஐஸ்வால் - சம்பை சோதனை சாவடி யில் நடைபெற்ற சோதனையின் பொழுது பொலிரோ கார் ஒன்றில் ரூ.32 கோடி மதிப்புள்ள 115.55 கிலோ மெத்தம்பேட்ட மைன் போதைப்பொருள் கைப்பற்றப் பட்டது. இதுதொடர்பாக ஒரு பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுதில்லி
மக்களவை காங்கிரஸ் துணை தலைவராக கவுரவ் கோகாய்
மக்களவை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் தொ டர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா வுக்கு கடிதம் எழுதி யுள்ளார். அதில் மக்க ளவை காங்கிரஸ் துணை தலைவர், தலைமை கொறடா மற்றும் இரண்டு கொற டாக்களை தேர்வு செய்த பட்டியலை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. அதன் படி மக்களவை காங்கிரஸ் துணை தலை வராக அசாம் எம்.பி. கவுரவ் கோகாய் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் 8 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா வாக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் கிஷன்கஞ்ச் (பீகார்) தொகு தியில் வெற்றி பெற்ற எம்.பி. ஜாவீத் ஆகியோர் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் மற்ற இரண்டு கொறடாக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுதில்லி
கெஜ்ரிவால் உடல்நிலை கவலைக்கிடம்?
ஆம் ஆத்மி அதிர்ச்சி தகவல்
மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ-யும் மதுபான கொள்கை வழக்கு தொ டர்பாக கெஜ்ரிவாலை கைது செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையாக கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் சிபிஐ வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் இருப்பதால் அவர் ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியேற வர முடியாத நிலைமையில் உள்ளார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்ப தாக ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி பொதுப்பணித்துறை அமைச்சருமான அதிஷி கூறுகையில்,”பொய் வழக்கில் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்து பாஜக சதி செய்து வரும் நிலையில், அவரது உடல்நிலைக்கு கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளது. கெஜ்ரிவால் உடல் எடை 8.5 கிலோ மேலும் குறைந் துள்ளது. குறிப்பாக அவரது சர்க்கரை அளவு 50-க்கும் கீழ் குறைந்துள்ளது. ஒரு நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலை ஆகும்” என அவர் கூறினார். கெஜ்ரிவாலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்ப தாக அதிஷியின் கருத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்
பாஜகவின் தோல்விக்கு வெளிநாட்டு சதியாம்
பாஜக பெரும்பான்மையை பெற முடியாமல் தோல்வியை தழுவியதற்கு வெளிநாட்டு சதி தான் காரணம் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”மக்களவை தேர்த லில் பாஜகவின் இடங்கள் குறைந்ததன் பின்னணியில் வெளிநாடுகளின் சதி உள்ளதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த வர்களும் தேர்தலில் பாஜக வெல்லக் கூடாது என்று விரும்பினர்’’ என அவர் கூறினார்.