சென்னை, ஏப். 23 - கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு 3 ஆண்டு சிறைத் தண் டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப் பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண் டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய் யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம். தண்ட பாணி முன்பு ஏப்ரல் 15 அன்று விசார ணைக்கு வந்தது.
அப்போது, பல ஆண்டுகளாக காவல் துறைக்கு தலைமை பொறுப்புவகித்த நிலையில், சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத் தும் எனவும், சிறையில் அடைக்கப்பட்ட பிறகுமேல் முறையீட்டில் ஒருவேளை தான் விடுதலை செய்யப்பட்டால் என்ன ஆகும்? என்றும் ராஜேஷ்தாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, முதலில் சர ணடைந்து விட்டு பின்னர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால், அது குறித்து பரிசீலிக்கலாம் என கூறினார். பெண் அதி காரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண் டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்? எனவும் கேள்வி எழுப்பிய நீதி பதி, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு மீதான காவல்துறையின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கூடுதல் குற்ற வியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், தண்டனையை நிறுத்தி வைக்கக் கூடாது எனவும் ராஜேஷ் தாஸூக்கு எதிரான குற் றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசார ணையை தள்ளிவைத்தார்.
செவ்வாய்க்கிழமை (ஏப்.23) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக் கூறி, விழுப்புரம் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவிட்டது.