india

img

மக்களவையில் மேலும் 3 எம்.பி-க்கள் இடைநீக்கம்!

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்திய மேலும் 3 காங்கிரஸ் எம்.பி-க்களை  மக்களவையிலிருந்து இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸை சேர்ந்த டி.கே.சுரேஷ், நகுல்நாத், தீபக் பைஜ் ஆகியோர் அவையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று 2 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த நிலையில், இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மக்களவையில், ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிா்க்கட்சிகளின் மொத்த பலம் 138 ஆகும். இதுவரை 100 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 38 போ்தான் எஞ்சியுள்ளனர்.

திமுகவின் 24 எம்.பி.க்களில் 16 பேரும், திரிணமூல் காங்கிரஸின் 22 எம்.பி.க்களில் 13 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் 100 எம்.பி-க்கள், மாநிலங்களவையில் 46 எம்.பி-க்கள் என மொத்தம் 146 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.